
துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம்
தற்போது களம் காவல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் விநாயகன், துல்கர் சல்மானுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறும்போது, ”கம்மட்டிப்பாடம் படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு உண்மையிலேயே அபரிமிதமானது. காரணம் அந்த கதையின் பின்னணி களத்தில் நானும் உடன் நடித்த மணிகண்ட ஆச்சாரியும் ஏற்கனவே பழக்கமானவர்கள். அந்த வாழ்க்கையுடன் ஓரளவு வாழ்ந்து பழகியவர்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையில் இருந்து வந்த துல்கர் சல்மான் அந்த கதாபாத்திரமாக மாறி நடித்தது தான் உண்மையிலேயே சிறப்பான விஷயம். அந்த வருடத்தில் மிகச்சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்ததற்காக விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதும் இவர்கள் இருவருடன் நடித்த மணிகண்ட ஆச்சாரிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!