
ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி
மம்முட்டி என்கிற பெயர் தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து மம்முட்டி கூறும்போது, “கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய முகமது குட்டி என்கிற பெயரை மற்றவர்களிடம் சொல்வதற்கு நான் ரொம்பவே சங்கடப்பட்டேன். அதனால் அனைவரிடமும் என்னுடைய பெயர் ஓமர் ஷெரீப் என கூறி அறிமுகப்படுத்திக் கொண்டேன். எல்லோரும் என்னை ஒமர் என்று தான் அழைத்து வந்தார்கள். ஒரு நாள் பாக்கெட்டில் இருந்த என்னுடைய ஐடி கார்டு தவறி விழுந்தபோது அதை ஏதாச்சையாக எடுத்த நண்பர் சசிதரன் என் பெயரை படித்ததும் ஒரு வேகத்தில் நீ ஒமர் இல்லையா ? அப்படி என்றால் உன் பெயர் மம்முட்டி தானே என்று கூறினார்.
அப்போது இருந்து என்னுடைய நண்பர்கள் மத்தியில் மம்முட்டி என்கிற பெயரே பதிந்துவிட்டது. அதுவே என்னுடைய திரையுலக பயணம் தொடங்கியபோதும் இப்போது உங்கள் முன் நிற்கும் வரையில் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. பல பேர் எனக்கு தாங்கள் தான் இந்த பெயரை சூட்டினோம் என்பது போல அவ்வப்போது கூறுவார்கள். ஆனால் எனக்கு தெரிந்து எனக்கு இந்த பெயரை வைத்தது இந்த நண்பர் சசிதரன் தான். இத்தனை நாட்களாக ஒரு சர்ப்ரைஸ் ஆக இவரை நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்று கூறினார்.
மம்முட்டியின் நண்பரும் தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப் இந்த நிகழ்வு குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரையும் பார்த்தபோது கத பறயும்போல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!