
திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம்
அதேசமயம் ஹிந்தியில் இதன் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தை வெளியிடும் உரிமையை மும்பையை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் ஜீத்து ஜோசப்பிடம் தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இதன் வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதால் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தான் இந்த படம் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இதனால் எந்த மாற்றமும் இல்லை. முதலில் மலையாளத்தில் தான் திரிஷ்யம் 3 வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!