
பாகுபலியால் ஒரு நாள் தள்ளிப்போகும் ரவிதேஜாவின் மாஸ் ஜாதரா ரிலீஸ்
தெலுங்கில் நடிகர் ரவிதேஜாவின் "மிஸ்டர் பச்சன்" திரைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவர் நடித்துள்ள "மாஸ் ஜாதரா" திரைப்படம் வரும் அக்.,31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பானு போகவரப்பு இயக்கியுள்ளார். "தமாகா" படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தில் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவிதேஜா.
இந்த நிலையில் தற்போது இந்த படம் அக்.,31க்கு பதிலாக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காரணம் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு "பாகுபலி ; தி எபிக்" என்கிற பெயரில் ஒரே படமாக அதே அக்.,31ம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த நாளில் ரசிகர்களின் கவனம் முழுவதும் பாகுபலி பக்கம் தான் இருக்கும் என்பதால் அதனுடன் ஏற்படும் போட்டியை தவிர்ப்பதற்காக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி மாஸ் ஜாதரா படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!