
துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப்
கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை 19 போட்டியாளர்களுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த வருடமே அவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலக முடிவு எடுத்து விட்டதாகவும் திரையுலகில் மற்றும் இன்னும் சில பணிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
அதேசமயம் பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விட்டு அதிலிருந்து விடை பெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகவே கூறியிருந்தார். அதனால் இந்த 12வது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்கிற கேள்வி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் சேனல் நிர்வாகத்திற்கும் சுதீப்பிற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கை காரணமாக தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு இந்த 12வது சீசனையும் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!