
2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ்
இந்த ஓணம் பண்டிகையன்று இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை துவங்கி விட்டேன். என்னுடைய சில பெர்சனலான சந்திப்புகள் மற்றும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இது எந்த படத்திற்கான இரண்டாம் பாகம் என்பதை சஸ்பென்ஸாக சொல்லாமல் விட்டுள்ளார் தருண் மூர்த்தி.. ரசிகர்கள் அனைவருமே இது தொடரும் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் அதற்கு முன்னதாக அவர் சைபர் க்ரைமை மையப்படுத்தி இயக்கிய ஆபரேஷன் ஜாவா படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போகிறார் என்றும் மாறி மாறி தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!