
நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்
அதை நம்பி அந்த இரண்டாம் பாகத்திற்கு 1.9 கோடி வரை பணத்தை செலவு செய்தாராம் ஷாம்னாஸ். அதுவரை நிவின்பாலியின் தயாரிப்பு நிறுவனமிடம் இருந்த அனைத்து பணிகளையும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் தான் அதற்கு முந்தைய ஒப்பந்தத்தின் படியே இந்த இரண்டாம் பாகத்திற்கான வெளிநாட்டு உரிமையை ஒருவரிடம் 5 கோடி விலை பேசி இரண்டு கோடி ரூபாய் முன்பணமும் வாங்கிவிட்டதாக ஷாம்னாஸுக்கு தெரிய வந்தது.
இது குறித்து நிவின்பாலி மற்றும் அப்ரிட் ஷைன் இருவருடனும் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்படவே அவர்கள் மீது புகார் அளித்துதிருந்தார். தயாரிப்பாளர் ஷாம்னாஸ். இந்த வழக்கு குறித்து நிவின்பாலி கூறும்போது, எங்களது பெயரை சீர்குலைக்கும் விதமாகவும் இப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்து சட்டரீதியாக எதிர்கொள்வோம். உண்மை நிச்சயமாக வெளிவரும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையை நிறுத்தி வைக்குமாறு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!