
நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம்
இது விஷ்ணுவர்தன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறும்போது, “விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. நான் கிச்சாவாக பேசவில்லை. அவரது ஒரு ரசிகனாக மிகப்பெரிய அளவில் புண்பட்டு இருக்கிறேன். அதேசமயம் விஷ்ணுவர்தன் எப்போதுமே சொல்வதுண்டு, “இறந்தாலும் நான் ஏதோ ஒரு கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க விரும்ப மாட்டேன். இல்லையென்றால் ஒரு அசையாத பொருளாக இருக்க மாட்டேன். வேறு ஐந்து விதமான வடிவங்களாக நான் உணரப்படுவேன். நாம் இயற்கையை சேர்ந்தவர்கள் என்று அவ்வப்போது கூறுவார்.
ஒரு வகையில் அவரது அந்த விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட சாதாரண ரசிகர்களும் மக்களும் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தபால் பெட்டி எப்படி தேவையோ அதே போலத்தான் நம் பிரார்த்தனைகளை மரியாதையை செலுத்துவதற்கு ஒரு நினைவிடம் தேவை” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியும், “விஷ்ணுவர்தன் நினைவிடம் இடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரது பெர்சனாலிட்டியையும் கலைக்கு அவர் செய்த பணிகளையும் அவமானப்படுத்துவது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!