
வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த குணச்சித்திர நடிகை மாலா பார்வதி இந்த மறு தேர்தல் குறித்து கூறும்போது, “நடிகர் சங்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தன. நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது கூட அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் வில்லன் நடிகர் பாபுராஜ் மீது அப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இத்தனைக்கும் மோகன்லால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூட அவர் கேட்கவில்லை. அப்படி அவர் மறுத்ததால் தான் இனி இந்த தலைவர் பதவியில் இருப்பதற்கு அவசியம் இல்லை என்று கருதிய மோகன்லால் அதன்பிறகு ராஜினாமா செய்தார்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் மாலா பார்வதி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!