
மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர்
அப்படி அவர் ஒரு போட்டியாளரிடம், “உங்களுக்கு மஞ்சு வாரியர் பிடிக்குமா? காவ்யா மாதவன் பிடிக்குமா ?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார். நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி தான் மஞ்சு வாரியர் என்பதும் அவரை விவாகரத்து செய்துவிட்டு தான் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த காவ்யா மாதவனை அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் பலருக்கும் தெரியும். அதனால் இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் போட்டியாளர்கள் கொஞ்சம் பதில் சொல்ல தயங்கினார்கள்.
உடனே நடிகர் தியான் சீனிவாசன் குறுக்கிட்டு, “அடுத்ததாக என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள்.. உங்களுக்கு யாரை பிடிக்கும் ? திலீப்பையா ? பல்சர் சுனிலையா என்று தானே கேட்கப் போகிறீர்கள் ?” என்று காமெடியாக கேட்டதும் ஷோபாவும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் அதிர்ந்து போனார்கள். காரணம் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி தான், நடிகர் திலீப் சிறை சென்று வந்தார். இந்த கடத்தல் வழக்கில் அவருக்கு உதவி செய்ததாக முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் இந்த பல்சர் சுனில். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அடுத்த கேள்வியை கேட்க போகிறீர்களா என நடிகர் தியான் சீனிவாசன் கேட்டதும் அவருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!