
மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் ஆடு 3
கடந்த 2015ல் முதல் பாகமும் 2017ல இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு இருவரும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “இதுவரை மலையாள சினிமாவில் டைம் ட்ராவல் பற்றிய கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த குறையை இந்த ஆடு 3 படம் போக்கும். இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த படம் உருவாகிறது” என்று ஒரு சஸ்பென்சை இப்போதே போட்டு உடைத்துள்ளார்.
டைம் ட்ராவல் கதை என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஆடு 3 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!