
திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம்
இந்த கோவிலுக்கு நேற்று மோகன்லால் திடீரென வருகை தந்தார். நேராக கோவிலுக்கு சென்ற அவர் முருகனை வழிபட்டு தங்கவேலை காணிக்கையாக செலுத்தினார். எம்புரான், தொடரும் படங்களின் வெற்றி, மிகப்பெரிய வசூல் இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்க வேல் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
"தொடரும்" படத்தின் பாடல் ஒன்றில் "திருமலை முருகனுக்கு அரோகரா" என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரியை கேட்டதுமே திருமலை முருகனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று மோகன்லால் பட வெளியீட்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!