
தொடரும் படத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட மோகன்லாலின் சோட்டா மும்பை ரீ ரிலீஸ்
ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எம்புரான் மற்றும் தொடரும் என இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்று 200 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி உள்ளன. அதிலும் தொடரும் படம் தற்போதும் கூட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்துடன் வரவேற்பு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதே ஓட்டத்தில் சென்றால் எம்புரான் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை இந்த படம் செய்யும் என்கிறார்கள். அதனால் தற்போது தேவையில்லாமல் சோட்டா மும்பை திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்தால் ரசிகர்களின் கவனம் அதை கொண்டாடுவதில் திரும்பி விடும் என்பதால், தொடரும் பட வசூல் ஓட்டத்தை தடை செய்ய விரும்பாமல் தற்போது சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். புதிய தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!