
8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கதைத்தேர்வில் அவர் கோட்டை விடுவதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் அன்ட் பேமிலி படம் டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பை படக்குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் திலீப் பேசும்போது, “எப்படி எனக்கு இக்கட்டான சமயத்தில் ராம்லீலா திரைப்படம் கை கொடுத்ததோ, அதேப்போல தற்போது பிரின்ஸ் அன்ட் பேமிலி திரைப்படமும் எனக்கு கை கொடுத்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நான் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் ஒருநாள் கடவுள் நிச்சயமாக நான் பேசுவதற்கு எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார். அந்த ஒரு நாள் வரும் வரை நான் அமைதியாக காத்திருப்பேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!