
தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி
இதனைத் தொடர்ந்து லிஸ்டின் ஸ்டீபனுக்கு நிவின்பாலி ரசிகர்கள் இடம் இருந்து எதிர்ப்பு வலுத்தது. அதே சமயம் நான் நிவின்பாலி பற்றி சொல்லவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். அதேபோல கோவில் தரிசனத்திற்காக வந்திருந்த நிவின்பாலியிடம் இது பற்றி கேட்டபோது, யார் எது சொன்னாலும் இப்போது அது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்த கோவிலில் இருந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருப்போம் என்று மட்டும் வேண்டிக் கொள்வோம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு பதில் சொல்லி சென்றார்.
இந்த சர்ச்சை இவ்வளவு பெரிதாவதற்கு காரணம் தற்போது லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்து வரும் பேபி கேர்ள் என்கிற படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு பாதி நடைபெற்று முடிந்த நிலையில் சில காரணங்களால் இடையில் நின்றிருந்தது. அதனால் நிவின்பாலி குறித்து தான் மறைமுகமாக தயாரிப்பாளர் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிவின்பாலி தற்போது வைக்கமில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளர், நிவின்பாலி இருவருக்கும் சமரச உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது தெரியவந்துள்ளது இந்த படத்தை அருண் வரமா என்பவர் இயக்கி வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!