
உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் இளம் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக தனது படங்களில் போதை மருந்து பயன்படுத்திய நடிகரால் தனக்கு ஏற்பட்டு அனுபவம் குறித்து அது அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளார். இவர் மலையாளத்தில் விக்ருதி, ஜன கன மன, சவுதி வெள்ளக்கா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். 2023ல் வெளியான ரேகா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு விருது மற்றும் பிலிம்பேர் விருது இரண்டையும் பெற்றவர்.
இது குறித்து அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரை குறிப்பிடாமல், “நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் முக்கிய நடிகராக நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். ஒரு முறை நான் அணிந்திருந்த ஆடையில் ஒரு சிறிய பிரச்சனை என்பதால் அதை சரி செய்வதற்காக ஒரு தனி அறைக்கு செல்ல முற்பட்டேன். அப்போது நானும் கூடவே வந்து உதவி செய்கிறேன் என என்னுடன் வர முற்பட்டார்.
அது மட்டுமல்ல இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே எனக்கு அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் இனிமேல் போதை பொருள் பயன்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் வின்சி அலோசியஸ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!