
தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை
ஏப் 08, 2025
Advertisement
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரியதர்ஷன். 99 படங்களை இயக்கிவிட்ட அவர் தற்போது தனது நூறாவது படத்தை நடிகர் மோகன்லாலை வைத்து இயக்க இருக்கிறார். ஏற்கனவே மோகன்லாலை வைத்து கிட்டத்தட்ட 40 படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழிலும் சில படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷன் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான இளம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதேசமயம் கல்யாணி போல மீடியா வட்டாரத்தில் பிரியதர்ஷினின் மகன் சித்தார்த் பெரிய அளவிற்கு வெளிச்சம் பெறவில்லை. காரணம் அவர் நடிப்பிலோ டைரக்ஷனில் கவனம் செலுத்தாமல் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதில் தான் கவனம் செலுத்தி வந்தார். வெளிநாட்டிற்கு சென்று இதற்காக படிப்பெல்லாம் படித்து வந்த சித்தார்த் தனது தந்தை இயக்கிய வரலாற்று படமான மரைக்கார் படத்தில் கூட விஎப்எக்ஸ் பணிகளை கவனித்தார்.
கடந்த 2023ல் சித்தார்த்துக்கும் அவரது தோழி மெர்லின் என்பவருக்கும் எளிமையான முறையில் அவர்களது அபார்ட்மெண்டில் திருமணம் நடைபெற்றது. இதில் பிரியதர்ஷன் அவரது, முன்னாள் மனைவி லிஸி, கல்யாணி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளும் சில நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்,
சமீபத்தில் கல்யாணி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் கல்யாணியின் பின் பக்கமாக பிரியதர்ஷன் மற்றும் வலது, இடது புறங்களில் மகனும் மருமகளும் நிற்கின்றனர், மகன் கையில் குழந்தையுடன் நிற்கிறார். இதன் மூலமாக இயக்குனர் பிரியதர்ஷன் தாத்தாவாக ஆகி உள்ளார் என்கிற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் கூட ஆச்சரியமாக பிரியதர்ஷன் தாத்தாவாகி விட்டாரா என்கிற கேள்வியை கேட்டு வருகின்றனர்.
அதேசமயம் கல்யாணி போல மீடியா வட்டாரத்தில் பிரியதர்ஷினின் மகன் சித்தார்த் பெரிய அளவிற்கு வெளிச்சம் பெறவில்லை. காரணம் அவர் நடிப்பிலோ டைரக்ஷனில் கவனம் செலுத்தாமல் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதில் தான் கவனம் செலுத்தி வந்தார். வெளிநாட்டிற்கு சென்று இதற்காக படிப்பெல்லாம் படித்து வந்த சித்தார்த் தனது தந்தை இயக்கிய வரலாற்று படமான மரைக்கார் படத்தில் கூட விஎப்எக்ஸ் பணிகளை கவனித்தார்.
கடந்த 2023ல் சித்தார்த்துக்கும் அவரது தோழி மெர்லின் என்பவருக்கும் எளிமையான முறையில் அவர்களது அபார்ட்மெண்டில் திருமணம் நடைபெற்றது. இதில் பிரியதர்ஷன் அவரது, முன்னாள் மனைவி லிஸி, கல்யாணி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளும் சில நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்,
சமீபத்தில் கல்யாணி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் கல்யாணியின் பின் பக்கமாக பிரியதர்ஷன் மற்றும் வலது, இடது புறங்களில் மகனும் மருமகளும் நிற்கின்றனர், மகன் கையில் குழந்தையுடன் நிற்கிறார். இதன் மூலமாக இயக்குனர் பிரியதர்ஷன் தாத்தாவாக ஆகி உள்ளார் என்கிற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் கூட ஆச்சரியமாக பிரியதர்ஷன் தாத்தாவாகி விட்டாரா என்கிற கேள்வியை கேட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!