
எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில்
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லாலிடம் எம்புரான் படமும் ரீமேக்காக வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, முதல் பாகத்தில் கதையில் சில மாற்றங்களை செய்து தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். அது கூட படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கலாம், அதனால் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தான் கூறியிருந்தார். இதே கேள்வி தற்போது இயக்குனர் பிரித்விராஜிடமும் இன்னொரு நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக சிரஞ்சீவி, சல்மான்கானை வைத்து எம்புரான் தெலுங்கு ரீமேக்கை நீங்களே இயக்குவீர்களா என்றும் பிரித்விராஜிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பிரித்விராஜ், “இப்போது எம்புரான் படத்தை மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறார்கள். அதனால் ரீமேக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. அதேசமயம் என்னைவிட மிகத் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த படத்தின் ரீமேக் பணிகளில் இறங்கினால் நான் உண்மையிலேயே சந்தோஷப்படுவேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!