
இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர்
குறிப்பாக ராஜமவுலி இந்த டிரைலரின் முதல் ஷாட்டை பார்க்கும் போதே இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி என்பது தெரிகிறது என பாராட்டியுள்ளார். இந்த நிலையில் எம்புரான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலுக்கு ரிலீசாக இருக்கும் படம் தொடரும். இதை இயக்குனர் தருண மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது இவரும் எம்புரான் டீசரை பார்த்து விட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் பிரித்விராஜ் இந்த அளவிற்கு பிரமிக்க வைத்துள்ளாரே.. இப்போ நான் என்ன பண்றது என வடிவேலு பாணியில் ஒரு கமெண்ட்டை பதிவிட்டுள்ளார்.
இதற்கு உங்களுடைய படத்தையும் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் என பிரித்விராஜ் கூறியுள்ளார். எம்புரான் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள நிலையில் தொடரும் படம் ஒரு சென்டிமென்ட் பேமிலி டிராமாவாகத்தான் உருவாகியுள்ளது. எம்புரான் படத்தைப் போல அந்த படத்திலும் எப்படி மோகன்லால் ரசிகர்களை திருப்திபடுத்தப் போகிறேன் என்கிற விதமாகத்தான் அவரது கமெண்ட் அமைந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!