
ஹேமா கமிஷன் அறிக்கை : கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முன் வைக்கப்பட்ட வாதங்கள் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்குகள் மேற்கொண்டு நகராமல் நிற்கின்றன. இதனை தொடர்ந்து இப்படி புகார் கொடுத்தவர்களிடம் இன்னும் அழுத்தமான விளக்கங்கள் வேண்டும் என்றும் அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் கட்டாயமாக விளக்கங்களை பெறவும் சிறப்பு புலனாய்வு குழு முயற்சிக்கிறது என்று உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு புலனாய்வு குழுவினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் யாரையும் சோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது.. அதேபோல கட்டாயப்படுத்தி விளக்கங்களையும் கேட்கக் கூடாது.. அப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் ஒரு மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளிக்கலாம்.. அல்லது தங்களது விருப்பமின்மையை தெரிவிக்கலாம்.. அதேசமயம் அவர்கள் இதற்காக சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு வேகத்தடையாக ஆக மாறி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!