
எம்புரான் படம் மூலம் மலையாளத்தில் நுழைந்த விஜய் பட வில்லன்
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் வேலாயுதம், தலைவா மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தான். இந்த படத்தில் இவர் நடிக்கும் பால்ராஜ் என்கிற கதாபாத்திர போஸ்டரை இன்று மோகன்லால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அபிமன்யு சிங் கூறுகையில், “என்னுடைய கதாபாத்திரம் நிச்சயமாக வித்தியாசமான ஒன்று. அது சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் போக்கில் இந்த கதாபாத்திரத்திற்கான மாற்றமும் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பதால் என்னைப் போன்ற நடிகர்களுக்கான வேலை ரொம்பவே எளிதாகி விட்டது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!