
ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர்
இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அதே சமயம் அது குறித்த உத்தரவு சிறைக்கு சரியான சமயத்தில் வந்து சேரவில்லை என்றும் டெக்னிக்கல் கோளாறு என்றும் காரணம் சொல்லப்பட்டது. அதே சமயம் அவரை வரவேற்பதற்காக அவருடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் சிறை வாசலில் வந்து காத்திருந்தனர். ஆனால் பாபியோ தான் அங்கிருந்து செல்ல விரும்பவில்லை என்று கூறி, “இதுபோல பல பேர் ஜாமின் கிடைத்தும் டெக்னிக்கல் கோளாறு என்கிற காரணத்தால் இன்னும் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் சார்பாக நான் இங்கேயே இருக்கப் போகிறேன்” என்று கூறி திடீரென ஒரு அதிரடி ஸ்டன்ட் அடிக்க தொடங்கினார்.
இந்த தகவல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதும், நீதிபதி குஞ்சி கிருஷ்ணன், “பாபியின் ஜாமின் உத்தரவு குறித்த நேரத்தில் நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. டெக்னிகல் தாமதம் என்பதற்காக சிறையில் ட்ராமா பண்ணிக்கொண்டு அவர் நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா” என காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து தனது வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட பாபி செம்மனூர், பின்னர் ஒரு வழியாக நேற்று சிறையில் இருந்து வெளியேறி உள்ளார். தன் மீதான புகாரை திசை திருப்புவதற்காக தான் அவர் இப்படி அதிரடியாக ஒரு விஷயத்தை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!