
உன்னி முகுந்தனுக்கு ராம்கோபால் வர்மா புகழாரம்
இது குறித்து தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “மார்கோ படத்தை விட வேறு எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான பாராட்டு கிடைத்திருக்குமா என்றால் ஒருபோதும் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தை பார்ப்பதற்கு நான் சாவதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னி முகுந்தன் என்னை நிச்சயம் கொல்ல மாட்டார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு சண்டை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஏழுமே அதிக அளவில் வன்முறை கொண்ட சண்டைக் காட்சிகளாக தான் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படம் ராம்கோபால் வர்மாவின் பாராட்டுகளை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!