
யார் கல்லெறிந்தாலும் கவலை இல்லை, கடவுள் எனக்கு பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் - நடிகர் திலீப்
அந்த வழக்கில் அவர் சிக்கியிருந்த சமயத்தில் தான் அவரது நடிப்பில் உருவான ராம்லீலா திரைப்படம் வெளியாகி நூறு கோடி வசூலித்தது. இதனால் திலீப் மீது ரசிகர்கள் எந்த அதிருப்தியிலும் இல்லை என்பது அப்போது நிரூபதமானது. ஆனாலும் சமீபகாலமாக அவர் கதை தேர்வில் கோட்டை விடுவதால் தான் சரிவை சந்தித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் அவரது படங்கள் வெளியாகும் போது அவர் குறித்த பர்சனல் விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் அவர் மீது வீசப்படுகிறது. சமீபத்தில் கூட சபரிமலையில் அவருக்கென விதிமுறைகளை தளர்த்தி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய நடிகர் திலீப், “என் மீது யார் வேண்டுமானாலும் கல்லெறிந்து கொள்ளட்டும்.. என் புகழுக்கு களங்கம் விளைவித்தாலும் விளைவிக்கட்டும். அது பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. எனக்கு இன்னும் பேசுவதற்கான வாய்ப்பு வரவில்லை.. கடவுள் அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பார் என நிச்சியமாக நம்புகிறேன். எனக்கு எப்போதுமே என் பின்னணியில் இருந்து உற்சாகமும் பாதுகாப்பும் பலமும் கொடுப்பவர்கள் எனது ரசிகர்கள் தான்.. அவர்களால் தான் இன்று நான் இங்கே நிற்கிறேன். நிச்சயம் அவர்கள் விரும்பும் விதமான படங்களை தொடர்ந்து கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!