
நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாக இருந்த இயக்குநர் மரணம்
இதனை தொடர்ந்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதம் சிறைவாசமும் அனுபவித்து பின் ஜாமீனில் வெளிவந்தார். அது மட்டுமல்ல அந்த சமயத்தில் திலீப் சிறை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஒரு காலத்தில் அவரது நண்பராக இருந்து, பின்னர் சில காரணங்களால் அவரது எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர்தான். இவர் ஓரிரு படங்களை இயகியுள்ளார். நடிகை கடத்தல் குறித்த வீடியோ காட்சிகளை திலீப் தன் வீட்டில் பார்த்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர் நீதிமன்றத்திலும் அதை சாட்சியமாக பதிவு செய்தார்.
இதன் அடிப்படையிலேயே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக முடிவில்லாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பாலச்சந்திர குமார் உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். கோழிக்கோடு அருகில் உள்ள தனது சொந்த ஊரான செங்கநூரில் வசித்து வந்த அவர் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவரது மரணம் இந்த வழக்கில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!