
நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா?
அதை பரிசீலித்த நீதிமன்றமும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு திரும்புவதற்காக ஆறு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும் அது இன்னும் தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் அவருடைய ரத்த அழுத்தம் இன்னும் ஒரு சீராக இல்லை என்றும் அவருக்குள் இருக்கும் டென்ஷன் காரணமாக ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால் இந்த அறுவை சிகிச்சையை தற்போது செய்தால் அது அபாயமாக கூட முடியலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதால் இன்னும் அதற்கான தேதி இதுதான் என மருத்துவர்கள் முடிவு செய்ய வில்லையாம். தற்போது அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனில் மூன்று வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் இனி எப்போது அறுவை சிகிச்சை நடைபெறும், அதன்பிறகு அவர் எப்போது குணமாகி சிறை திரும்புவது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அது மட்டுமல்ல அவர் தனது ஜாமீனை நீட்டிப்பதற்காக தான் இது போன்ற ஒரு நாடகம் ஆடுகிறார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!