
212 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜெயசூர்யாவின் கத்தனார் படப்பிடிப்பு
இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யாவின் திரை உலக பயணத்தில் அவர் முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் படமாக கத்தனார் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயசூர்யா தவிர பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜின் தாமஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் வரலாற்று பின்னணியில் தான் உருவாகிறது.
அதுமட்டுமல்ல மலையாள திரையுலகிலேயே முதன்முறையாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் படமும் இதுதான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 18 மாதங்களாக 6 கட்ட படப்பிடிப்புகளாக 212 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்கிற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!