
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மலையாள நடிகர் கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த நடிகர் பைஜூ சந்தோஷை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்ததால் அவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ரத்த பரிசோதனைக்கு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து பைஜூ சந்தோஷை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சொந்த ஜாமீனில் அவரை போலீசார் விடுவித்தனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!