
72 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட அர்ஜூன் : மோகன்லால், மம்முட்டி, மஞ்சு வாரியர் இரங்கல்
மேலும் பிரபல மலையாள திரையுலக நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி, மஞ்சு வாரியர் ஆகியோரும் அர்ஜுனின் மறைவு குறித்து உருக்கமாக தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மம்முட்டி வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜுன் எப்படியாவது திரும்பி வந்து விடுவார் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இன்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
மோகன்லால் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “உனக்காக நாங்கள் எல்லோரும் தொடர்ந்து பிரார்த்தித்தோம். எங்கள் அனைவரின் அன்பிற்கு உரியவனாகவும் நீ மாறினாய். அன்பு சகோதரா உனக்கு என் இறுதி அஞ்சலி” என்று கூறியுள்ளார்.
அர்ஜுனின் சடலம் கைப்பற்ற செய்தி அறிந்து முதல் ஆளாக தனது இரங்கலை வெளிப்படுத்திய நடிகை மஞ்சு வாரியர் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் உன்னை தகனம் செய்து எரிப்பதற்காகவாவது உன்னை திரும்ப பெற்றோமே. ஒரு கைப்பிடி சாம்பல் உன்னை நினைவூட்டி கொண்டிருக்கும். அன்பு அர்ஜுன்.. மலையாளிகளின் இதயங்களில் நீ எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாய்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!