
போதை வழக்கில் சிக்கிய ஹேமா மீதான தடை நீக்கம்
இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தெலுங்கு நடிகை ஹேமா என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஹேமா தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஹேமா நான் எந்த போதை விருந்தையும் ஏற்பாடு செய்யவில்லை. போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் தனக்கு இல்லை. தெலுங்கு நடிகர் சங்கம் சரியாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் தனக்கு தடை விதித்திருப்பதாக கூறினார். அதோடு இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் போதை மருந்து அருந்தவில்லை என்ற மருத்துவ சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய ஆதாரங்களை பரிசீலனை செய்த தெலுங்கு நடிகர் சங்க செயற்குழு ஹேமா மீது விதித்து இருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!