
நாகசைதன்யாவிடம் பரிசு கேட்ட சர்ச்சை ஜோதிடரின் மனைவி
அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா ஜோடி 2027க்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் அதற்கும் ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடம் கணித்துக் கூறியது சலசலப்பையையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண்கள் உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஜோதிடரின் மனைவியான வீணா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நாகசைதன்யா-சோபிதா ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததற்காக நாகசைதன்யா தனக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை தர வேண்டும் என்று பகிரங்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். தனது கணவரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவர் இப்படி நாகசைதன்யாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!