
வெற்றிப்படம் கொடுத்த இயக்குனரிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்
வெற்றிப் படத்தை கொடுத்தவரிடம் நஷ்ட ஈடு கேட்பார்களா என ஆச்சரியப்பட வேண்டாம். நகாஸ் முதல் படம் இயக்க ஒப்புக்கொண்டபோதே இரண்டாவது படத்தையும் அவர்களது நிறுவனத்திற்கு தான் இயக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முதல் படத்தில் 15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த இரண்டாவது படத்திற்கு 40 லட்சம் ரூபாய் இயக்குனர் நகாஸ் ஹிதாயத்திற்கு கொடுக்கப்பட்டதுடன் முன் தயாரிப்பு பணிகளுக்காக 4.82 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென இந்த படத்தில் பணிபுரிய தனக்கு விருப்பமில்லை என்று இயக்குனர் நகாஸ் ஹிதாயத் பின் வாங்கினார். இதனால் ஏற்கனவே தங்களுக்கு செய்து தந்திருந்த ஒப்பந்தத்தை இவர் மீறி விட்டார் என கூறியுள்ள தயாரிப்பாளர் சோபியா பால் இவருக்கு தாங்கள் கொடுத்த தொகையுடன் மேலும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தர வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளார். ஆனால் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இது குறித்து கூறும் போது தனக்கு இதுபோன்று எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!