
போட்டோ ஷூட்டுக்காக 400 படிகள் ஏறிய சிவராஜ்குமார்
இந்த படத்தில் சிவராஜ்குமாரின் கதாபாத்திர பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் உயரமான இடத்தில் நடைபெற்ற இதன் போட்டோ ஷூட்டுக்காக கிட்டத்தட்ட 400 படிகள் வரை ஏறி கலந்து கொண்டுள்ளார் சிவராஜ்குமார். தனது 61 வயதிலும் ஒரு போட்டோஷூட்டுக்காக சிவராஜ்குமார் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போய் உள்ளார் இயக்குனர் ஹேம்நாத் ராவ்.
சிவராஜ்குமார் கூறும்போது, “என்னுடைய தந்தை அவரது காலகட்டத்தில் இதேபோன்று பல படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் அதிக அளவிலான ரசிகர்களின் அன்பையும் சம்பாதித்தார். அந்த வகையில் இந்த படத்தின் கதை ஒவ்வொரு அங்குலத்திலும் என்னை கவர்ந்துள்ளது. பைரவா கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியே. ஹேம்நாத் ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!