
காது கேளாதவர்களுக்கான மொழியில் இந்தியாவின் முதல் படமாக ஓடிடியில் வெளியாகும் டைகர் நாகேஸ்வர ராவ்
இது குறித்து தகவலை பகிர்ந்து கொண்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், “இந்திய சினிமாவில் இது ஒரு புதிய அத்தியாயம். இது போன்று இன்னும் பல படங்களை வரும் காலத்தில் இந்த பிரத்யேக மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஓடிடியில் இப்படி வெளியாகும் முதல் படம் இது என்பதுடன் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது உலக அளவில் இதுபோன்று குறைபாடு கொண்ட ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இதை உருவாக்கி இருக்கிறோம். இந்திய சினிமாவில் இது போன்ற ஒரு முக்கியமான மாற்றத்தை முதல் ஆளாக முன்னெடுப்பதில் பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!