
ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல்
ஆனால் அப்படிப்பட்ட என்கவுன்டரே அரசியல் பின்னணிக்காக செய்யப்பட்டது தான். அதில் அப்பாவிகள் பலியாகி உள்ளனர் என்கிற புதிய கோணத்தில் இந்தப்படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஆந்திராவில் நடைபெற்ற என்கவுன்டரும் அப்படிப்பட்ட ஒரு போலியான என்கவுன்டர் தான் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த படத்தை இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் இந்த படத்திற்காக வெளியிட்டிருந்த டீசர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை. அப்படியானால் இதற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா என்று அப்போதே பேசப்பட்ட நிலையில் இரண்டாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்காக சில காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன என்று படம் வெளியான சமயத்தில் கூறி இருந்தார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.
ஆனால் அதைத் தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடித்துள்ள மலையாளி பிரம் இந்தியா என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். வரும் மே 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜன கன மன 2வை ஆரம்பிப்பாரா என சமீபத்தில் இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜோ ஜோஸ் ஆண்டனி முதல் பாகத்திற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் கொடுத்த வெற்றி இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான இன்னும் கூடுதல் பொறுப்பை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்னும் கவனமாக இரண்டாம் பாகத்திற்கான கதையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் இது குறித்த அப்டேட் தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!