
3 மணிநேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ள வினித் சீனிவாசன் படம்
இதிலும் பிரணவ் தான் கதாநாயகனாக நடிக்கிறார். வினீத் சீனிவாசனின் ஆஸ்தான ஹீரோவான நிவின்பாலியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட இருக்கிறது.
மேலும் மொத்தம் மூன்று மணி நேரம் ஓடும் விதமாக இந்தப்படம் உருவாகி இருப்பதாக படக்குழுவில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. மலையாளத்தில் பெரும்பாலும் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடும் விதமாக படங்கள் வெளியாகி வரும் வேளையில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி இருப்பதாலும் கதைக்கு தேவைப்படுவதாலும் துணிந்து மூன்று மணி நேர படமாக இதை ரிலீஸ் செய்கிறாராம் வினீத் சீனிவாசன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!