
கதை திருட்டு சர்ச்சை : உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஸ்ரீமந்துடு இயக்குனருக்கு நெருக்கடி
அப்போது கொரட்டலா சிவாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து கொரட்டலா சிவா உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றமும் நம்பள்ளி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் தற்போது கொரட்டலா சிவா சட்டப்படியான நடவடிக்கையை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். இந்த சமயத்தில் அவர் தரப்பிலிருந்து கதாசிரியர் சரத் சந்திராவுடன் சமரசம் செய்து கொண்டு சென்றால் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தீர்ப்பானது கொரட்டலா சிவாவின் திரையுலக பயணத்தில் சறுக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக வெளியான இவரது ஆச்சார்யா படத்திற்கு கூட தனது கதையை திருடி தான் படமாக்கி உள்ளார் என ஒரு கதாசிரியர் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!