
மகளின் திருமணத்திற்காக கேரள கவர்னருக்கு விருந்தளித்த சுரேஷ்கோபி
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தலைமையில் சுரேஷ் கோபியின் மூத்த மகள் பாக்யாவுக்கும் ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது மகளின் திருமணத்திற்கு ஏற்கனவே கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு சுரேஷ்கோபி அழைப்பு விடுத்திருந்த நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சுரேஷ் கோபியின் வீட்டிற்கே வந்து மீண்டும் மணமக்களை வாழ்த்தியுள்ளார். சுரேஷ் கோபியும் கவர்னருக்கு சிறப்பான விருந்தோம்பல் செய்து அவரை கவுரவித்தார். கடந்த சில தினங்களாக கேரளாவில் ஆளும் அரசுடன் எதிர்ப்பு போக்கை கடைபிடித்து வரும் கவர்னர், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுரேஷ்கோபியின் வீட்டிற்கே வந்து சென்றுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!