
சகோதரியிடம் நடிகர் சங்க வீட்டை பறிகொடுத்த நடிகை; கருணை இல்லத்தில் அடைக்கலம்
தனியாக இருக்கிறோமே என்று நினைத்த பீனா தன்னுடைய இளைய சகோதரி ஒருவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கஷ்டப்படுவதை கண்டு அவருக்கு உதவியாகவும் தனக்கும் துணையாக இருக்கட்டுமே என தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தார். இந்த நிலையில் தான் தங்கையும் தங்கை கணவரும் பீனாவிடம் இந்த வீட்டை இப்போதே எங்களுக்கு எழுதிக் கொடுங்கள் என மனரீதியாக டார்ச்சர் செய்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும்படி கடுமையாக நிர்பந்தித்தனர்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்க கடைசியாக தனக்கு தெரிந்த சமூக சேவகர் சீமாவுக்கு போன் செய்து பீனா விவரம் சொல்ல, சீமா அவரை அழைத்துச் சென்று தான் நிர்வாக உறுப்பினராக உள்ள கருணை இல்லம் ஒன்றில் சேர்த்து தங்க வைத்திருக்கிறார். இனி தங்கையுடன் வீட்டுக்காக போராட முடியாது என்றும் என் மீதி வாழ்நாட்களை இந்த கருணை இல்லத்திலேயே கழித்து விடுகிறேன் என்றும் விரக்தியுடன் கூறியுள்ளார் நடிகை பீனா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!