
படத்தின் ரிசல்ட்டை ஆன் லைன் விமர்சனங்கள் தீர்மானிப்பதில்லை : மம்மூட்டி
அதற்கு பதிலளித்த அவர் “திரைப்படங்களை பார்த்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
ஆனால் மம்முட்டியின் கருத்தோடு இயக்குனர் ஜியோ பேபி ஒத்துப்போகவில்லை. “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. ஆன்லைன் விமர்சனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பேட்டியின் போது ஜோதிகா உடன் இருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!