
ஜெயசுதாவின் செல்போனை பிடுங்கி வைத்த மோகன்பாபு : வைரலாகும் வீடியோ
இந்த நிகழ்ச்சியின்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையேறி பேசிக்கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் நாகேஸ்வரராவின் பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அதை மோகன்பாபு சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு இடைஞ்சல் செய்வது போல அருகில் இருந்த ஜெயசுதாவின் செல்போன் தொடர்ந்து ஒலிப்பதும் பின்னர் ஜெயசுதா அடிக்கடி தொடர்ந்து செல்போனில் உரையாடுவதுமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இது மோகன்பாபுவை எரிச்சலுட்டியது, இதனைத் தொடர்ந்து படக்கென ஜெயசுதாவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்த மோகன்பாபு, நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி கவனிக்குமாறு அவரிடம் கூறியுள்ளார். மோகன்பாபுவின் இந்த செயலால் முதலில் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தாலும் அதன்பிறகு அவர் காமெடியாக தான் இதை செய்தார் என்பதை உணர்ந்து கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பிரபலங்களாக இருந்தாலும் தங்களது செல்போனை அணைத்து வைத்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்க வேண்டும், மோகன் பாபு சரியாக தான் செய்திருக்கிறார் என கூறினாலும் ஒரு சிலரோ மோகன்பாபுவின் இந்த செயல் ஏற்புடையதல்ல என்றும் கூறி வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!