
குண்டூர் காரம் படத்திலிருந்து ஒளிப்பதிவாளரும் வெளியேறினாரா?
இசையமைப்பாளர் தமன் கூட இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என தமன் சமீபத்தில் மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் பி.எஸ் வினோத், சில காரணங்களால் தற்போது வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நட்பு கூட்டணியில் இருந்து வருபவர் தான் பி.எஸ் வினோத். அரவிந்த சமேத வீரராகவா மற்றும் ஆல வைகுண்டபுரம் லோ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தேதிகள் மட்டும் ஸ்கிரிப்டில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதாலேயே ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!