
தவறு செய்திருந்தால் இத்தனை நாட்கள் நீடித்திருக்க முடியாது : சுதீப் பதில்
இது குறித்து இதுவரை அமைதி காத்த கிச்சா சுதீப், தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் இவ்வளவு நீண்ட காலமாக இந்த சினிமா துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. இதற்கு மேல் இந்த பிரச்சனை பற்றி பேசினால் அது நீதிமன்றத்தை அவமதித்தது போல ஆகிவிடும். அதனால் எது உண்மை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு தயாரிப்பாளரான ஹூக்கா ரகுமான் என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு தேவை என்றால் தனியாக நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!