
சுரேஷ் கோபியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் : தொழிலதிபரை மணக்கிறார்
இரண்டு மகள்களில் மூத்தவரான பாக்யாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மாவேலிக்கரையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் பாக்யா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள சுரேஷ் கோபியின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணம் வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20ல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார் சுரேஷ் கோபி. பாக்யா சமீபத்தில் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!