
20ம் வருடத்தில் சிஐடி மூஸா ; 2ம் பாகம் அறிவிப்பு
தற்போது இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவின் இறுதியில் விரைவில் இரண்டாம் பாகம் என்கிற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் ரசிகர்கள் பலரும் இத்தனை வருடம் கழித்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் சாத்தியமா படம் வெளியானால் முதல் பாகத்தைப் போல வெற்றி பெறுமா என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
கரணம் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இப்போது உயிருடன் இல்லை. அதுமட்டுமல்ல படத்தின் நாயகியும் நாயகனும் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கடத்தல் வழக்கு காரணமாக இப்போது எதிரெதிர் துருவத்தில் இருக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்தே தான் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் என்றால் நிச்சயம் ஏதாவது புதிதாக முயற்சிப்பார்கள் என நம்புவோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!