
சர்ச்சை நடிகர்களின் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ?
அதேபோல நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது, போன் அழைப்புகளை அலட்சியப்படுத்துகிறார் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார் மற்றும் சில இடங்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கிறார் என்பது போன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து இந்த இருவர் மீதும் தயாரிப்பாளர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இணைந்து படங்களில் நடிக்க தடை விதித்தனர்.
இதில் ஸ்ரீநாத் பாஷி நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. அதே சமயம் இந்த பிரச்சனை நடந்த சமயத்தில் அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பித்தார். ஆனால் இப்போது வரை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின்போது இந்த இரு நடிகர்களின் பிரச்சனையும் பேசி சுமுகமாக தீர்க்கப்பட உள்ளது என்றும் இனி அவர்களால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!