
இறுதிக்கட்டத்தை எட்டிய அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவுப்படம்
அதே சமயம் நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயன் நம்பியார் என்கிற அறிமுக இயக்குநருக்கு வழங்கினார். இந்த ஜெயன் நம்பியார் ஏற்கனவே பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான "லூசிபர்" படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல, சாச்சி இயக்கிய அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களிலும் கூட முதன்மை இணை இயக்குனராக பணியாற்றியவர் தான்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தொடங்கி அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிரித்விராஜ் ஒரு பக்கம் டைரக்சன் மற்றும் இன்னொரு பக்கம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் 50 நாட்கள் கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இதுவும் சாச்சி கதை எழுதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்கள் போல ஈகோ பின்னணியில் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!