
பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ்
அதேசமயம் கடந்த 2015ல் வெளியான பிரேமம் படத்திலேயே இவருக்கு நடிக்க அழைப்பு வந்தது. மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த செலினா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான அஞ்சனா ஜெயபிரகாஷ் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த கதாபாத்திரத்தில் இருந்து இவர் விலக்கப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
அந்த படத்தின் மூலம் மடோனாவுக்கு கிடைத்த புகழ் நாடறிந்த ஒன்று. சினிமாவில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ள அஞ்சனா ஜெயப்பிரகாஷ், இத்தனை வருடங்கள் கழித்து தற்போது பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் துருவங்கள் பதினாறு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட சில படங்களிளும் நடித்துள்ளார் அஞ்சனா ஜெயபிரகாஷ்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!