
சிரஞ்சீவியை அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் காலமானார்
கடந்த சில நாட்களாகவே சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று காலமானார். தெலுங்கு திரை உலகத்தை சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மறைவுக்கு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி. இதில் அவர் கூறும்போது, “மூத்த இயக்குனர் கே.வாசு. அவர் இப்போது இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. என் திரையுலக பயணத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்த பிராணம் கரிது, தொடடோங்காலு, அல்லுல்லு அண்ணுரு, கொத்தலா ராயுடு ஆகிய படங்களை இயக்கியவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!