
நயன்தாரா பட இயக்குனரின் படப்பிடிப்பில் நஷ்ட ஈடு கேட்டு வியாபாரிகள் கலாட்டா
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஒசானா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை என்கிற ஊரில் நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினார்கள்.
மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் மார்க்கெட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு இழப்பீடாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினர். வேறு வழியின்றி பணத்தை கொடுத்த பின்னரே படக்குழுவினர் அங்கே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடிந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கனவே நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதியை படக்குழுவினர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!